தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்துக்கு அனுமதி வழங்கினார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!
Saturday, January 28th, 2023
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மற்றும் புனர்வாழ்வு பணியகம் தொடர்பான ஆவணத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுப்படுத்தினார்.
இந்த சட்டமூலத்திற்கு சபாநாயகரால் அண்மையில் அனுமதி வழங்கப்பட்டது.
தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம் மற்றும் மறுவாழ்வு பணியக சட்டமூலம் ஆகியவை இந்த மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
அதன்படி, 2023 ஆம் ஆண்டின் புனர்வாழ்வுப் பணியகச் சட்டம் எண். 2 மற்றும் 2023 ஆம் ஆண்டின் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் எண். 3 ஆக சட்டமூலங்கள் நடைமுறைக்கு வருகின்மை குறிப்பிடத்தக்கது
Related posts:
வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிட்டவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்ட நடவடிக்கை!
பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள்: நுகர்வோர் பெரிதும் பாதிப்பு!
தேங்காய் பற்றாக்குறை – மக்களை வதைத்து ஏற்றுமதி மூலம் பெரும் இலாபம் ஈட்ட திட்டமிடும் வியாபாரிகள்!
|
|
|


