தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சுக்கு கடிதம் !
Tuesday, January 24th, 2023
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தேவையான நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பது தொடர்பில் தெரியப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் நிதி அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவு 10 பில்லியன் ரூபாவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த தொகை நிதியை வழங்க முடியுமா, இல்லையா என்பதை தெரியப்படுத்துமாறு உரிய கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை வெளிநாட்டு சேவை தரம் III ற்கான போட்டிப்பரீட்சை!
வாள்வெட்டக்கு இலக்காகி குடும்பப் பெண் படுகாயம் - மீசாலை வடக்கில் சம்பவம்!
ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் அடங்கிய ஏனைய கொள்கலன்கள் இந்த வாரம் மீள் ஏற்றுமதி!
|
|
|


