வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!
Monday, January 23rd, 2023
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கடற்னொழில் அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
நீண்ட காலமாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்ற தமக்கு, நிரந்தர நியமனத்தைப் பெற்றுத் தருமாறு இதன்போது அமைச்சரிடம் குறித்த ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதுதொடர்பாக தன்னால் ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எடுத்துரைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னும் சில மாதங்கள் பொறுத்திருக்குமாறும், அமைச்சரவை பத்திரம் ஒன்றின் ஊடாக தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தரப்படும் எனவும் தெரிவித்தார்.- 23.01.2023
Related posts:
சிறுமி சேயா படுகொலை வழக்கு போல் மாணவி வித்தியா படுகொலை வழக்கும் துரிதப்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ...
சட்டமூலங்கள் எமது நாட்டுக்குப் பொருந்துவனவாக இருத்தல் வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக...
அரச பொது வேலைத்திட்டங்கள் வகுக்கப்படும்போது தமிழ் சொற் பதங்கள் இணைக்கப்படாதிருப்பது ஏன்? நாடாளுமன...
|
|
|


