ஆசிரியர் சேவையில் 8 ஆயிரம் பேரை இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை!
Sunday, January 22nd, 2023
கல்வியல் கல்லூரியில் டிப்ளமோ பாடநெறியை பூர்த்தி செய்த 8 ஆயிரம் பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளில் இவர்கள் கடமையாற்றவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்காக பல்வேறு பாடசாலைகளிலும் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் எதிர்வரும் பாடசாலை தவணைக்கு முன்னதாக இவர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
பலாலி விமான நிலையத்தில் சேவை நடத்த முண்டியடிக்கும் நிறுவனங்கள்!
வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் - தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்...
ஈ.பி.டி.பியின் வரைபுகள் ரணிலின் விஞ்ஞாபனத்தில் - சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!
|
|
|


