வறட்சியான காலநிலையில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்ப்பு!
Friday, January 20th, 2023
நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் எதிர்பார்க்கப்படலாமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
நாட்டின் மற்றைய பகுதிகளில் முக்கியமாக மழையற்ற சீரான வானிலை நிலவக்கூடும்.
ஊவா மற்றும் வட மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
முற்றுகையாகவுள்ள அமைச்சர் பைஸர் முஸ்தபா வீடு?
13 ஐ முழுமையாக அமுல்படுத்த பொதுஜனபெரமுன மக்களுக்கு உறுதியளிக்கவில்லை - புதிய அரசியலமைப்பை உருவாக்குவ...
உக்ரேன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்சி ரெஸ்னிகோவ் பதவியில் இருந்து நீக்கம் - அந்த நாட்டு ஜனாதிபதி வோலோட...
|
|
|


