வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் அமைச்சர் மஹிந்த அமரவீர!
Thursday, January 19th, 2023
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பதவியை பதவியிலிருந்து தான் விலகியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அப்பதவிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு, ஜனாதிபதிக்கு வழி வகுக்கும் வகையில் தான் பதவி விலகியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவர் விவசாயத்துறை அமைச்சராக தொடர்ந்தும் பதவி வகிப்பார்.
இதேவேளை, இரண்டு புதிய அமைச்சர்கள் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழாவில் உரை நிகழ்த்துகையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.
Related posts:
பனைமரங்களின் பரம்பல் செய்மதியில் கணக்கெடுப்பு - பனை அபிவிருத்தி சபை!
சீனி நெருக்கடிக்குத் தீர்வாக கரும்பு உற்பத்திக் கிராமங்களை அமைக்க் நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் ஜான...
நாளைமுதல் காலாவதியாகவுள்ள இலங்கை கடவுச்சீட்டுகளுக்கு ஒருவருடகால சலுகை - குடிவரவு மற்றும் குடியகல்வு ...
|
|
|


