இந்தியா, சீனாவுடனான இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவிப்பு!
Tuesday, January 17th, 2023
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போதுவரை முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களை நோக்கும்போது, எமது பொருளாதாரத்தை சரியான பாதையில் தடமேற்றுவதற்காக நாம் முன்னெடுத்த செயற்பாடுகளை அவதானிக்க முடியும்.
மேலும், இந்தியா மற்றும் சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஒப்புதலை பெற வேண்டிய பணிகள் மாத்திரமே மீதமுள்ளன.
அந்த இரு நாடுகளுடனும் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதென கூறமுடியும்.
விரைவில் அது தொடர்பான பதில்கள் கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
பால்மாவின் விலை அதிகரிக்காது - நிதியமைச்சர் மீண்டும்தெரிவிப்பு!
உதவி ஆசிரியர்கள் ஆட்சேர்ப்புக்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு - செயலாளர் ஜோசப் ஸ்டார்லின்!
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வொசிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை - அமெரிக்க தூதரகம் தெரிவிப்...
|
|
|


