5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்கள் வெளியிட வாய்ப்பு – பரீட்சை திணைக்களம் அறிவிப்பு!
Wednesday, January 11th, 2023
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
எனவே, இன்னும் இரண்டு நாட்களில் அந்த பணிகளை நிறைவுசெய்ய முடியும் என்று அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றிருந்த நிலையில் அதற்காக 334,698 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தஜிகிஸ்தான் கூடுதலான ஒத்துழைப்பை இலங்கையிடமிருந்து எதிர்பார்க்கின்றது!
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நீக்கப்படலாம் – நாளை இறுதி முடிவு எட்ட...
அனலைதீவுஐயனார்கோவிலில்திருடப்பட்டபித்தளைகலசங்கள்ஊர்காவற்துறைபொலிஸாரால்மீட்பு!
|
|
|


