நியூயோர்க்கில் சக்திவாய்ந்த குளிர்கால புயலால் இதுவரை 34பேர் உயிரிழப்பு!
Thursday, December 29th, 2022
வட அமெரிக்காவை தாக்கிய ஒரு சக்திவாய்ந்த குளிர்கால புயல் அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் அதிகமான உயிர்களைக் கொன்றதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பஃபலோ நகரத்தை உள்ளடக்கிய எரி கவுண்டியில் குறைந்தது 34 பேர் இறந்துள்ளனர் என்று கவுண்டி நிர்வாகி மார்க் பொலன்கார்ஸ் நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
உயிரிழந்வர்களில் 3 பேரை அடையாளம் காணும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
விடுமுறை வார இறுதியில் அமெரிக்கா முழுவதும் வீசிய புயல், எட்டு மாநிலங்களில் குறைந்தது 60 பேரைக் கொன்றது.
1977இன் பிரபலமற்ற பனிப்புயலின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளை விட, கடந்த சில நாட்களில் எரி கவுண்டியில் இப்போது அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த புயலில் இருபத்தி ஒன்பது பேர் இறந்ததாக தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.
Related posts:
ஜெரூஸலம் விவகாரத்தில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது அமெரிக்கா!
முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டது – கல்வி அமைச்சு அ...
அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் விடயம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது - ந...
|
|
|


