30 ஏக்கர் காணியை அம்பேவளை பண்ணைக்கு விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்பு!
Wednesday, December 28th, 2022
அம்பேவளை பண்ணைக்கு அருகில் கைவிடப்பட்டுள்ள 30 ஏக்கர் காணியை உடனடியாக குறித்த பண்ணைக்கு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில், நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
அத்துடன் குறித்த காணியை, பசுக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மேய்ச்சல் நிலமாக அபிவிருத்தி செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுத்தல் வழங்கியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின!
பிரதமர் மஹிந்த அரசியலிலிருந்து ஓய்வு பெற முயற்சித்தாலும் நாட்டு மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் ...
சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் - தேவையான நிதியை துரிதமாக வழங்குமாற ஜனா...
|
|
|


