மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி யாமீனுக்கு 11 வருட சிறை – மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Monday, December 26th, 2022

மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 மில்லியன் டொலர் அபராதமும் விதித்து மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனியார் நிறுவனமொன்றிடமிருந்து கையூட்டல் பெற்றமை மற்றும் பணச்சலவை குற்றத்துக்காக அவருக்கு இந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், தாம் எந்த தவறும் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி யாமீன் மறுத்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் அப்துல்லாஹ் யாமீன் தமது அதிகாரத்தை இழந்தார். எனினும், 2023 இல் நடைபெறவுள்ள தேர்தலுக்கு மாலைதீவின் முற்போக்குக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஏற்கனவே, ஒரு பில்லியன் டொலர் அரச நிதியை மோசடி செய்த குற்றத்துக்காக, 2019 ஆம் ஆண்டில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

அவரது தண்டனை விதிப்புக்கு பிறகு, யாமீன் 2020 இல் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டு சில மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


இன்றுமுதல் பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பம் - சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க விசேட குழ...
பயிர்களை அழிக்கும் உயிரினங்களை கொல்ல விவசாய அமைச்சர் அனுமதி - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்...
எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம் - மின்சக்தி, எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!