புதிய ஆண்டு தொடக்கத்தில் டெங்குக் காய்ச்சல் அதிகளவில் பரவும் அபாயம் – சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Tuesday, December 20th, 2022

இந்த வருடத்தை விட அடுத்த வருட ஆரம்ப காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பூச்சியியல் அதிகாரிகள் வழங்கும் தரவுகள் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்க கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


எமது அரசியல் வழிமுறையே யதார்த்தமானது - ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட  உதவி  நிர்வாகச்  செயலாளர்  சிவகுர...
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இலங்கையின் அரச தலைவர்களால் ஆரம்பித்துவைப்பு!
2017 மற்றும் 2019 விட ஜனவரி மாதத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் -வைத்தியர் சுதத் சமரவீர...