யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த பேருந்து கிளிநொச்சியில் விபத்து – 23 பேருக்கு காயங்களுடன் கிளிசொச்சி வைத்தியாலையில் அனுமதி!

Monday, December 5th, 2022

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்று கிளிநொச்சி பகுதியில் இன்று (5) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வீதியில் இருந்த மாடுகளுடன் குறித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் எவருக்கும் பாரிய பாதிப்பு இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீளவும் துரிதப்படுத்தப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவ...
உலகுக்கு நாம் எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும் – ர...
அதிக புகையை வெளியேற்றும் வாகனங்கள் குறித்து தகவல் கொடுங்கள் - காற்று மாசு பிரிவு பொதுமக்களிடம் கோரிக...