விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழியில் – அரச ஊழியர்களுக்கு துறைசார் அமைச்சு அறிவிப்பு !
Wednesday, November 16th, 2022
அரச நிறுவனங்களின் அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கான நடவடிக்கையை பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு எடுத்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பான முன்னோடி திட்டம் உட்துறை அமைச்சில் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த முயற் வெற்றியடைந்தால் நாடளாவிய ரீதியில் உள்ள அரச அலுவலகங்களில் குறித்த முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்!
புதியவகை பெற்றோல் அறிமுகம்!
பேஸ்புக் நிறுவனம் அதிரடி - 24 மணி நேரத்தில் 15 இலட்சம் வீடியோக்கள் நீக்கம்!
|
|
|


