சவுதியின் முன்னணி ஆடை நிறுவனப் பிரதிநிதிகள் – வெளிவிவகார அமைச்சர் அல் சப்ரி சந்திப்பு – இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பில் ஆரராய்வு!
Tuesday, November 15th, 2022
சவுதியின் முன்னணி ஆடை நிறுவனமான Ajlan & Bros Group இன் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
அஜ்லான் & பிரதர்ஸ் குழுமத்தின் தலைவர் ஷேக் மொஹமட் அல்-அஜ்லான் உள்ளிட்ட குழுவினரை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வரவேற்றார்.
“இலங்கையில் முதலீடு செய்வதற்கான குழுவின் திட்டங்கள் ஊக்கமளிக்கின்றன” என்று அமைச்சர் அலி சப்ரி டுவிட்டர் செய்தியில் தெரிவித்தார்.
Ajlan & Bros Group, சவுதி அரேபியா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) பிராந்தியத்தில் பாரம்பரிய மற்றும் ஓஃப்-தி-ஷெல்ஃப் ஆடை தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.
1979 இல் நிறுவப்பட்டதும் ரியாத்தை தளமாகக் கொண்டதுமான அஜ்லான் & பிரதர்ஸ் 10 க்கும் மேற்பட்ட வெவ்வேறு நாடுகளில் 12,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
எபடீன் நீர்வீழ்ச்சி சுற்றுலா வலயமாகின்றது!
தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் பின்னரே X-Press Pearl கப்பலின் சிதைவுகளை அகற்ற முடியும் என அறிவிப்பு!
சீனாவின் Gansu மாகாணத்தில் நிலநடுக்கம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு!
|
|
|


