மதுபான விற்பனை 40 சதவீதத்தினால் வீழ்ச்சி – மதுவரித் திணைக்களம் தெரிவிப்பு!
Monday, November 7th, 2022
மதுபான விற்பனை தற்போது 40 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, மதுவரியினால் அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ள வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மதுவரி ஆணையாளர் நாயகம் எம். ஜே குணசிறி தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடி, பணவீக்கம், எத்தனோல் மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த ஆண்டில் 3 தடவைகள் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.
இந்த வருடத்தில் மாத்திரம் மதுவரியின் ஊடாக 185 பில்லியன் ரூபா வருமானமாக எதிர்ப்பார்க்கப்பட்டது.
கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 40 சதவீதம் மதுபான விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.
எனவே, இந்த வருட இறுதியில் 160 பில்லியன் ரூபா வரையிலேயே வருமானமாக ஈட்ட முடியும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இங்கிலாந்து கடலில் மூழ்கி இலங்கை தமிழர்கள் 5 பேர் பலி!
20 ஆவது திருத்துக்கு எதிராக நீதிமன்றுக்கு செல்லும் சஜித் தரப்பு!
இலங்கை - போலந்து நாடுகளுக்கு இன்றுமுதல் நேரடி விமான சேவைகள் ஆரம்பம் - சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்...
|
|
|
சுகாதார சட்டங்களை மீறி செயற்படும் பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அரசாங்க வைத்திய அத...
இந்தியாவை அச்சுறுத்துவதற்காக இலங்கையை எவரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கமாட்டேன் - இந்திய வெளிவிவகார...
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - தனியார் துறை ஊழியர்கள் குறித்தும் ஆராய்வு – பிரதமர் ரணில் தெரிவு!


