கடும் மழை – யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் இடம்பெயர்வு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டது அறிவுறுத்து!
Tuesday, November 1st, 2022
நாட்டில் கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றது இவ்வாறான நிலையில் யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக மூன்று குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பருவப் பெயர்ச்சி மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ். மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்துவருகின்றது.
இந்த அடைமழை காரணமாக வீட்டினுள் வெள்ளம் புகுந்ததனால் யாழ்ப்பாணம் ௲ காக்கைதீவு பகுதியில் வசித்துவரும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் காக்கைதீவு மீனவர் சங்க கட்டடத்தினுள் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பிறந்தநாள் வீட்டில் உணவுண்ட 10பேர் வைத்தியசாலையில் அனுமதி- கரணவாய் கொற்றாவத்தையில் சம்பவம்!
குடிதண்ணீர் சுத்திகரிப்பு தொகுதிகள் கையளிப்பு!
இலங்கையில் நேற்று மட்டும் 368 பேருக்கு கொரோனா தொற்று - ஒருவர் உயிரிழப்பு - இராணுவத் தளபதி!
|
|
|


