வெளிநாட்டவர்கள் மாணிக்கக்கல் அகழ்வதற்கு முற்றாகத்தடை!
Monday, August 29th, 2016
நாட்டில் வெளிநாட்டவர்கள் மாணிக்கக்கல் அகழ்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதர தெரிவித்துள்ளார்.
சில வெளிநாட்டு நிறுவனங்கள் தற்போது சட்டத்திற்கு புறம்பான வகையில் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதர தெரிவித்துள்ளார்.
Related posts:
சுன்னாகத்தில் இளைஞனுக்கு கத்திக் குத்து : சந்தேகநபர் கைது!
கொழும்புக்குக் கடத்தப்படவிருந்த இரண்டு இலட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் குடும்பஸ்தர் கைது!
மகளிடம் சேட்டை புரிந்தவரின் காதை அறுத்த தந்தை - கிளிநொச்சியில் சம்பவம்!
|
|
|


