தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை திருத்த தீர்மானம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Sunday, October 23rd, 2022
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை இந்த வருடம்முதல் திருத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி பரீட்சாத்திகளுக்கு பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பாகம் முதலில் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வினாத்தாளின் பகுதி – I பின்னர் வழங்கப்படும். இதன்கீழ் 2022, டிசம்பர் 18, இல் திட்டமிடப்பட்ட 2022 தரம் 05 புலமைப்பரிசில் கால அட்டவணை:
பகுதி II (60 பல தேர்வு மற்றும் குறுகிய பதில் கேள்விகள் , முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள், பகுதி I 40 பல் தேர்வு கேள்விகள், முற்பகல் 11.15 மணி முதல் 12.15 மணி வரை. ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் அபிவிருத்திக்கு உதவித் தொகையை அதிகரித்தது இந்தியா!
நண்டு பிடித்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் யாழ்ப்பாண மாவட்ட மீனவர் சங்கம் தெரிவிப்பு!
லிட்ரோ எரிவாயுவின் விலை நிச்சயம் அதிகரிக்கும் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!
|
|
|


