இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Friday, October 21st, 2022
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரவு வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
க. பொ. த சாதாரண தரத்தில் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைக்காமையினால் மாணவி தற்கொலை!
பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க தீர்மானம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு...
வவுனியா மாவட்டத்தில் கரும்புச் செய்கைக்காக 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்க ஜனாதிபதி அனுமதி !
|
|
|


