ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையில் ஏற்படுத்தப்பட்ட சேத விபரங்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவு!

Sunday, October 2nd, 2022

கடந்த ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட ஜனாதிபதி மாளிகையின் விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது.

குறித்த அறிக்கை உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மாளிகை கட்டடம் மற்றும் அங்கு வைக்கப்பட்டிருந்த தொல்பொருள் சின்னங்கள் மற்றும் ஓவியங்கள் சேதமடைந்துள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அலரி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்களினால் சேதப்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸாரிடம் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கு  மாகணத்திலுள்ள கைத்தொழில்சாலைகளை மீளியக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா வல...
வறட்சியான காலநிலையால் இதுவரை 2 இலட்சத்து 48 ஆயிரத்து 531 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்தியந...
சில தென்னிலங்கை இனவாத தலைவர்களுக்கு விலைபோனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக்...