வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!
Monday, September 26th, 2022
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய ஓய்வூதிய வேலைத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள 18வயதிற்கும் 59வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு ‘மனுஷம்’ என்ற பெயரில் புதிய ஓய்வூதியதிட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் தம்மைப் பதிவு செய்து கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்வோர் இந்த காப்புறுதி திட்டத்திற்குள் உள்ளடங்குவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் மௌனம் சாதிக்க கூடாது - வெளிவிவகார அமைச்சர்
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - பெஃப்ரல் அமைப்பு!
சுகாதார சேவைகளில் பணிபுரியும் குறிப்பிட்ட சில ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக நீடிக்குமாறு கோரி ...
|
|
|


