கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பையும் உற்பத்தியையும் வலுப்படுத்தும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, September 15th, 2022

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களின் செயற்றிட்ட மீளாய்வுக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த காலப் பகுதியில் 196 வேலைத் திட்டங்கள் கிடைத்துள்ள நிலையில், இதுவரை 178 வேலைத் திட்டங்கள் பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூரணப்படுத்தப்பட்ட வேலைத் திட்டங்களை மக்கள் பயனடையும் வகையில் செயற்படுத்துவது மற்றும் பூரணப்படுத்தப்படாத வேலைத் திட்டங்களை முன்னகர்த்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடினார். –

இதனிடையே

அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் பூரணப்படுத்துவது மாத்திரமல்லாமல், அவற்றை மக்கள் பயனடையும் வகையில் செயற்படுத்துவதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பையும் உற்பத்தியையும் வலுப்படுத்தும் வகையில் வீட்டுத் தோட்டம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

தெரிவு சரியானதாக அமையுமாயின் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சூழல் உருவாகும்அமைச்சர்...
சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் சமூக சிந்தனையோடு செயற்பட வேண்டும் – அம...
கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு மன்னார் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்வார்கள் - ஈ.பி.டி.பி.கட...

முல்லை கடற்பரப்பில்  வெளிமாவட்ட மற்றும் எல்லை மீறிய கடற்றொழிலுக்கு இடமில்லை :  அமைச்சர் மகிந்த அமரவீ...
 இலங்கைத் தேயிலையின் தரத்தையும் நன்மதிப்பையும் பாதுகாக்க நடவடிக்கை அவசியம் - நாடாளுமன்றில் செயலாளர் ...
உரிமைப் பயணத்தில் எம்முடன் கலந்து ஒன்றாகி நின்றவர் தோழர் மகேஷ் – அனுதாபச் செய்தியில் அமைச்சர் டக்ளஸ...