பாதிக்கப்படக்கூடியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆசிய அபிவிருத்தி 203 வங்கியினால் இலங்கைக்கு மில்லியன் டொலர்களை அவசர கடன் உதவி!
Saturday, September 10th, 2022
ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதிசெய்யவும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 203 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவிக் கடனை வழங்குகிறது.
இதற்கான ஒப்பந்தம் நேற்று ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து அவசரகால கடன் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் போது, ஆசியா மற்றும் பசிபிக் நிதியம், திட்ட நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது. இந்த நிதி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாகவே வழங்கப்படவுள்ளது.
000
Related posts:
முன்னைய அரசாங்கம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் உதவியது – அமைச்சர் ஜ...
இலங்கையில் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார் பிரதமர் தினேஷ் குணவர்தன !
அதிபர் மற்றும் நிர்வாக சேவை வெற்றிடங்களை நிரப்புவதற்கும், சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் ...
|
|
|


