இராஜாங்க அமைச்சுகளை ஏற்ற சு.கவின் உறுப்பினர்களை நீக்க கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை!
Thursday, September 8th, 2022
கட்சியின் தீர்மானத்திற்கு மதிபளிக்காமல் இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்ற மற்றும் அமைச்சுப் பதவி பெறுவதற்குத் தயாராக உள்ள 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, லசந்த அழகியவன்ன, ஜகத் புஸ்பகுமார, சாமர சம்பத் தசநாயக்க ஆகிய 4 பேர் இன்று இராஜாங்க அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர்.
மேலும், அமைச்சரவை அமைச்சர் பதவிக்காக துமிந்த திஸாநாயக்க காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையிலேயே குறித்த ஐவரையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
000
Related posts:
வேகமாக பரவி வரும் அம்மை நோய் தொடர்பில் அரசு எச்சரிக்கை!
சர்வதேச ஈரநில பூங்கா சங்கத்தின் முதலாவது மாநாடு இலங்கையில்!
தரவு கட்டமைப்பை எவராலும் திருட முடியாது - டிஜிட்டல் மயப்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் - நா...
|
|
|


