ஏமாற்றும் தமிழ் தலைமைகள் மக்களின் அவலங்களில் குதூகல மகிழ்ச்சியடைகின்றன – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! ……

Saturday, August 20th, 2022


ஏமாற்றும் தமிழ் தலைமைகள் மக்களின் அவலங்களில் குதூகல மகிழ்ச்சியடைகின்றன.
அவலங்களை தீர விடாது தடுத்து வைத்து
அவர்கள் அடுத்த தேர்தல் வெற்றி குறித்து கனவு காண்கிறார்கள்.

ஆனால், ஈ.பி.டி.பி. யினராகிய நாம் அவலங்களை
தீர்த்து வைத்து, மக்களின் மாற்றத்தை நோக்கி பயணிக்க விரும்புகிறோம்.

எங்காவது ஓரிடத்தில் நெருப்பு எரிகின்றது என்றால், அதில் அவர்கள் எண்ணை ஊற்றி பற்றி எரிய வைக்கிறார்கள்.

ஆனால், நாம் எரிகின்ற இடத்தில்
தண்ணீரை ஊற்றி எரியும் நெருப்பை நிரந்தரமாக அணைய வைக்க விரும்புகிறோம்.

இதுவே எமக்கும் ஏனைய சுயலாப தமிழ் அரசியல் கட்சி தலைமைகளுக்கும் இருக்கும் வேறுபாடு.

எமது நடைமுறைச் சாத்தியமான அரசியல் வழிமுறை பட்டிதொட்டி எங்கும் நெருப்பாக பற்றிக்கொள்ளும் வகையில் எடுத்துச் செல்லப்பட வேண்டும்”

என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். – 20.09.2022

Related posts:

விவசாயிகளின் நலன் கருதி விவசாய நிலங்களுக்கான காப்புறுதி திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் M....
மக்களின் நம்பிக்கையை எவரும் வென்றெடுக்கவில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவ...
தேசிய கீதம், தேசிய கொடிக்கான முக்கியத்துவம் ஒவ்வொருவருக்கும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் இருப்பத...

சட்டவிரோத தொழில் முறைக்கு எதிராக கடற்றொழிலாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ...
தேசிய நல்லிணக்கதை சிதைக்கும் பிரகிருதிகளின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ...
தமிழ் மக்கள் போலித் தேசிய மாயையிலிருந்து விடுபடத் தொடங்கிவிட்டனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!