அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலையை நாடுங்கள். – மக்களுக்கு சுகாதார தரப்பினரால் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!
Friday, July 29th, 2022
மக்களிடையே காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல், தடுமல், சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ள கொவிட், டெங்கு தொற்று அல்லது வேறு வைரஸ் காய்ச்சலால் இந்த நிலை ஏற்படக் கூடும் எனவும் ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது சிறுவர்களுக்கு இடையில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும்,பிள்ளைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு சுகாதார தரப்புகள் பெற்றோர்களிடம் விசேட கோரிக்கையையும் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
விபத்தில் முன்னாள் போராளி பலி!
இலங்கையின் சுதந்திரதினத்தையிட்ட இந்திய பிரதமரின் வாழ்த்துச் செய்தி!
கிராமிய வீடமைப்பு செயற்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமர் துறைசார் தரப்பினருடன் ஆலோசனை!
|
|
|
பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 480 மில்லியன் வழங்கப்பட்டது - கல்வி அமைச்சின் செயலாளர் தெர...
மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான எரிபொருளைப் பெறுவதற்கு சரியான பொறிமுற...
ஒலுவில் துறைமுகத்தில் மீனுக்கான உணவு மற்றும் மீன் உணவு உற்பத்தித் தொழிற்சாலை – முதலீடு செய்ய தயாராக ...


