இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் – விவசாயத்துறை அமைச்சு அறிவிப்பு!
Monday, July 18th, 2022
அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் நாட்டிற்கு வரும் என விவசாயத்துறை அமைச்சு கூறியுள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த இருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடனின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட 65,000 மெட்ரிக் தொன் உரத்தில் இருந்து மொத்தம் 44,000 மெட்ரிக் தொன் உரம் கடந்த வாரம் நாட்டிற்கு வந்துள்ளது.
உரங்களை விநியோகிப்பதற்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நிதி வழங்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் உர விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சஜித்தின் அதிரடி அறிவிப்பு – அதிர்ச்சியில் ஐ.தே.க!
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து - யாரும் தப்ப முடியாது என கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு!
ஐக்கிய இராச்சியத்தால் இலங்கையில் புதிய வர்த்தகத் திட்டம் முன்னெடுப்பு - கொழும்பில் உள்ள பிரித்தானிய ...
|
|
|


