படுகொலை செய்யப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி – இலங்கையில் நாளை தேசிய துக்க தினமாக அறிவிப்பு!
Monday, July 11th, 2022
இலங்கையில் நாளையதினம் (12) தேசிய துக்க நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அன்றையதினம் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேசமயம் நாளையதினம் பொது விடுமுறை அல்ல எனவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் (Shinzo Abe) திடீர் மரணம் காரணமாக இலங்கையில் இவ்வாறு துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே (Shinzo Abe) மக்கள் மத்தியில் உரையாற்றிக்கொண்டிருக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு!
தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான சிங்கத்திற்கு நிமோனியா!
எதிர்வரும் காலங்களில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்படாது - பொதுமக்கள் பயன்பாட்டு ஆணை...
|
|
|
மருந்து உற்பத்தியை உள்நாட்டிலேயே முன்னெடுக்க விரிவான வேலைத்திட்டம் - ஔடத கட்டுப்பாட்டு விநியோகம் மற்...
மயக்க மருந்து இதுவரை குழந்தைகளுக்கு செலுத்தப்படவில்லை - பதவி விலகவும் ஆலோசனை என சுகாதார அமைச்சர் தெர...
தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தமை தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க நடவடிக...


