விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!
Tuesday, July 5th, 2022
நெற்பயிர் செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
உரப் பிரச்சினை மற்றும் அதனால் பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்துவதற்கு இயலாமை காரணமாக விவசாயிகள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
இதனால் அறவிட முடியாத கடனாக அவற்றை வங்கியும் அறிவித்துள்ளமையினால் விவசாயத்தை மேற்கொள்ள மேலதிக கடனை பெற்றுக்கொள்ள முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்மை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெற்றிலைக்கேணி இந்துமயான வீதி ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் சீரமைப்பு!
இலங்கையில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி!
மனித உரிமைகள் குழுவின் 137 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்!
|
|
|


