உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் மீண்டும் திரிபோஷா உற்பத்தி – சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவிப்பு!
Sunday, June 12th, 2022
இலங்கையில் திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கான உதவிகளை வழங்க உலக உணவுத் திட்டம் (WFP) இணங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இது தொடர்பில் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளது.
மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக முன்னர் நிறுத்தப்பட்ட திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிரப்பியாக திரிபோஷா வழங்கப்படும் என ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பேருந்தில் பணம் பறித்த “பட்டா கும்பல்” பருத்தித்துறையில் கைது!
விவசாயத்திற்கே முன்னுரிமை – ஜனாதிபதி கோட்டபய உறுதிபடத் தெரிவிப்பு!
விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் தேவையான திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்த ஆரம்பித்துள்ளது - ...
|
|
|
சதொச நிறுவன ஊழல் மோசடி தொடர்பான ஆவணங்கள் தயார் – ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் வழங்கத் தயார் - நுகர்வ...
ஊடகங்களால் ஆட்சியை மாற்ற முடியுமே தவிர நடப்பில் உள்ள ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது – பிரதமர் ...
ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் இரு சின்னங்கள் நீக்கம்!


