அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!
Sunday, May 29th, 2022
பண்டாரகம – அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பண்டாரகம – அட்டுலுகமவை சேர்ந்த 9 வயதான குறித்த சிறுமி நேற்றுமுன்தினம் காணாமல் போன நிலையில், நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக 3 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் காவல்துறையினரின் விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
லிட்ரோ எரிவாயு நிறுவனம் மக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு - அவசர இலக்கம் அறிமுகம்!
உறங்கிய அறையில் தீ – யாழ்ப்பாணத்தில் கணவனும் மனைவியும் பரிதமாக உயிரிழப்பு!
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள சட்டமூலம் பயங்கரவாதத்திற்கு எதிரானதே தவிர, ஜனநாயகத்திற்கு எதிரானதல்...
|
|
|


