நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வரவில்லை – பதவியும் விலக மாட்டார் – இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Friday, April 8th, 2022
நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வந்துவிட்டுச் செல்லவில்லை என்றும் மாறாக எதிர்க்கட்சிகளே ஜனாதிபதி வருவதை முன்னிட்டு ஒழிந்தார்கள் என்றும் இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு, அரசமைப்புக்கு இணங்க ஜனாதிபதி விலக மாட்டார் என்றும் அவர் எதற்காக பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார்.
மேலும், ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சிகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்கள் என்றும் அதற்கிணங்க விருப்பமான அமைச்சரவையொன்றை ஸ்தாபித்துக்கொள்ளுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
000
Related posts:
மாணவர் விஷாவில் சட்டவிரோதமாக ரஷ்யாவிற்குள் நுழைய வேண்டாம்: இலங்கைத் தூதரகம் எச்சரிக்கை!
மக்கள் அதிகமாக ஒன்றுகூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு - இராணுவத் தளபதி அறிவிப்பு!
இந்தியா - இலங்கை இடையிலான உறவு சிறப்பான நிலையை எட்டியுள்ளது - இலங்கையின் உயர்ஸ்தானிகர் மஹிசினி கொல...
|
|
|


