இன்றும் 5 மணித்தியாலங்கள் வரை சுழற்சி முறையில் மின் துண்டிப்பு – இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி!
Monday, April 4th, 2022
நாட்டில் இன்றையதினமும் 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.
முன்பதாக சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சாரசபை நேற்று கோரிக்கையினை முன்வைத்திருந்த போதிலும் அதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்தது.
இதற்கமைய, A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டது.
பின்னர் மாலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பை அமுலாக்க பொதுப் பயன்பாடுகள் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பதவி விலகுவது குறித்து பிரதமரின் அறிவிப்பு!
அவசியமான பெற்றோல் கையிருப்பில் உள்ளது - வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்ப...
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை போன்றவற்றில் ஏற்பட்ட சேதம் தொடர்பில் கணக்காய்வு செய்வதற்கு அராசங்கம் நட...
|
|
|


