வீடுகளில் பெற்றோல் சேமித்து வைப்பது ஆபத்தானது – பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Friday, March 25th, 2022

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியுடன் வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பது மிகவும் ஆபத்தானது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் கயான் முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த நாட்களில் பெற்றோல் போன்ற எரிபொருட்களினால் ஏற்படுகின்ற தீச் சம்பவங்கள் காரணகாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரண்டு நாட்களுக்கு ஒருவர் என்ற வீதத்தில் உயிரிழப்பதாகவும், நாளாந்தம் 4 முதல் 6 வரையான விபத்துக்கள் பதிவாகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:


மக்களது தேவை எதுவோ அதை பெற்றுக் கொடுப்பவர்களாகவே ஈழமக்கள் ஜனநாயக கட்சி இருந்து வருகின்றது - ஈ.பி.டி....
வடக்கு, கிழக்கு முஸ்லிம்களது பிர்சினைகளிலும் அரசு கவனம் - ஜனாதிபதியின் செயலாளர் ஹரீஸ் எம்.பியிடம் தெ...
காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களும் இரத்து செய்யப்பட...