பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு – குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை விநியோகிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஹேரத் தெரிவிப்பு!
Tuesday, March 15th, 2022
உள்நாட்டு சந்தையில் நிலவும் பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அடுத்த மாத ஆரம்ப பகுதியிலிருந்து குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை பகிர்ந்தளிக்க மில்கோ நிறுவனம் தயார் நிலையில் இருப்பதாக, இராஜாங்க அமைச்சர் ரி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் திரவ பால் உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டதால் சந்தையில் பால் மாவிற்கு தட்டுப்பாடு நிலவியது.
அடுத்த மாதம்முதல் திரவ பாலையும் பால் மாவையும் சந்தைக்கு விநியோகிக்குமாறு தான் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேனுக பெரேராவுக்கு பணிப்புரை வழங்கியிருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரி.பி.ஹேரத் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில் அனுமதி!
நாட்டில் எந்தவித மருந்து தட்டுப்பாடும் கிடையாது - சில தரப்பினர் அரசியல் செய்ய முயற்சி என இராஜாங்க அம...
வடக்கில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரிப்பு - வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பண...
|
|
|


