நாமல் பிணையில் விடுதலை!
Monday, August 22nd, 2016
நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்ஷ எம்.பி. பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கடந்த 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தவேளை கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொருளாதார வளர்ச்சி வேகத்தை 7 வீதத்திற்கு மேல் பேணப்படும்– ரவி கருணாநாயக்க!
வெளிநாட்டு நாணயங்களை அனுமதியின்றி விற்பனை செய்ய முடியாது - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
புதிய பிரதமர் பதவிப் பிரமாணம் - இலங்கையின் பெண் பிரதமராக வரலாற்றில் இடம்பிடித்தார் ஹரினி!
|
|
|


