சூளைமேட்டு வழக்கு விசாரணை இம்மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Thursday, March 24th, 2016

சூளைமேட்டுச் சம்பவம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா மீதான வழக்கு விசாரணை  சென்னை 4–வது கூடுதல் செசன்  நீதிமன்றத்தில் இன்றையதினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து காணொளியூடாக டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்தார்.

நீதிபதி எம். சாந்தி முன்னிலையில் இவ்வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தபோது இன்று 5 பேர் சம்பவம் தொடர்பாக சாட்சியமளித்துள்ளனர்.

இவ்வழக்கு இம்மாதம் 29 ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts: