சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை தயாராகவுள்ளது – அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவிப்பு!
Tuesday, February 22nd, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ்பத்திரன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் கடந்த காலங்களில் பல தடவைகள் கோரி இருக்கிறது. தற்போதும் அந்தவிடயத்தில் அரசாங்கம் தயாராக இருக்கிறது.
ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்து உதவி வழங்கும் நிறுவனங்களுடனும் அரசாங்கம் தொடர்பில் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வறட்சியால் வெங்காய பயிர்ச் செய்கை முற்றாக பாதிப்பு - வங்கிக்கடன் செலுத்தமுடியாது விவசாயிகள் திண்டாட்...
இன்று எரிபொருள் விலைத் திருத்தம்!
வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா செப்டம்பர் 24 ஆம் திகதி கொடியேற்றத்துட...
|
|
|
அனுமதி இன்றி கட்டப்பட்டும் கட்டிடங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படவேண்டும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் ...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்: இலங்கை மக்களுக்கு மற்றும் ஓர் அபாய எச்சரிக்கை விடுத்துள்...
இலவச இணைய கற்றலில் ஈடுபடுத்தும் திட்டத்தை விரைவுபடுத்துமாறு துறைசார் அதிகாரிகளிடம் அமைச்சர் நாமல் வல...


