தூதரக சேவைகளுக்கான நேர ஒதுக்கீடுக்கு கட்டணம் அறவிடுபவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு கோரிக்கை!
Monday, February 21st, 2022
தூதரக சேவைகளுக்கு, நேரத்தை ஒதுக்குவதற்காக கட்டணத்தை அறவிடுபவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு இத்தாலியின் மிலானில் உள்ள இலங்கைக்கான தூதரகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூதரக சேவைகளுக்காக நேரத்தை ஒதுக்குவதற்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர் அல்லது நிறுவனம் குறித்த நடவடிக்கைக்கு பணம் அறவிடுவார்களாயின், அவர்கள் தொடர்பான தகவல்களை slcg.milanShmfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு இத்தாலியின் மிலானில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை மேலும் ஒரு வாரங்களுக்கு நீடிப்பு - எல்லைகளில் தீவிர சோதனைகளுக்கும் உத...
சகல முச்சக்கரவண்டிகளிலும் கட்டண அளவீட்டு கருவியை பொருத்துவது கட்டாயம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமு...
இதுவரையில் தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொள்வதற்கான சந்த...
|
|
|


