புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது – பாதிப்பும் இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
Thursday, February 10th, 2022
புதிய உருமாறிய கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதன் பாதிப்பு இதுவரை இல்லாத வகையில் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பின் கொரோனா தொழில்நுட்பப் பிரிவின் தலைவா் கூறுகையில் – ‘தற்போதுள்ள ஒமைக்ரான்தான் கடைசி கொரோனா வகையாக இருக்காது. மேலும் நான்கு உருமாறிய கொரோனா தொற்று குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
அவ்வப்போது இவை உருமாற்றம் அடைவதால் இதுகுறித்த முழுமையாக உறுதி செய்ய முடியவில்லை.
இந்த புதிய உருமாற்றம் அடைந்த கொரோனாவால் இதுவரை கொரோனா வகைகளில் இல்லாத அளவுக்கு பரவல் வேகமும், பாதிப்பும் அதிகமாக இருக்கும்.
ஆகையால், கொரோனா தடுப்பூசி செலுத்தலை துரிதப்படுத்தி, அந்த புதிய வகையின் பரவல் வேகத்தை குறைக்க வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
000
Related posts:
சீனாவின் வர்த்தகம் தொடர்பான கறுப்பு பட்டியலில் இருந்து இலங்கை மக்கள் வங்கி நீக்கம்!
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைதுசெய்தாலும் அதனையும் “மீடியா ஷோ” என்று கூறுகின்றார்கள் - அமைச்சர் மன...
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார் அமைச்சர் அலி சப்ரி - மனித வளப் பரிமாற்றத்தை மேலும் ஊக்...
|
|
|


