யாழ். போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை இடைநிறுத்தம்!
Wednesday, February 9th, 2022
வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனை நாளை 10 ஆம் திகதிமுதல் யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படவுள்ளது.
அதனடிப்படையில் வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகள் நாளைமுதல் மறு அறிவித்தல்வரை யாழ். போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான PCR பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதாகவும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இம்மாதம் இம்மாதம் 21ஆம் திகதி சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை !
சீன ஆராய்ச்சி கப்பலை இலங்கைக்குள் அனுமதிப்பது தொடர்பில், இதுவரை இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை - வெள...
மானிப்பாய் பிரதேச சபையின் பொறுப்பேற்ற செயல்.. சிறுமியின் கையை பதம் பார்த்த குரங்கு!
|
|
|


