தடுப்பூசி போடாதோர் பொது இடங்களுக்குள் நுழையத் தடை – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Saturday, February 5th, 2022

கொரோனா தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடாத நபர்கள் பொது இடங்களுக்குள் நுழைவதை தடை செய்யும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதிமுதல் இந்த உத்தரவானது நடைமுறைக்கு வருகிறது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் தடுப்பூசி போடாத நபர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதற்கான ஆதாரம் இல்லாமல் தனி நபர்கள் பொது இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தடுப்பூசியிலிருந்து விலக்கு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் விலக்கு சான்றிதழ் சுகாதார அதிகாரிகளால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சுகாதார வழிக்காட்டல்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதமானவை - ஈ.பி.டி.பியின் உப்புவெளி ...
பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகம் - ஆட்கள...
ரணில் வெற்றியீட்டினால் நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் - ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகால ரட்...

உள்ளூராட்சி தொடர்பான புதிய வர்த்தமானிக்கு எதிரான மனுவை விசாரணை தொடர்பில் இன்று தீர்மானம்!
கடமைக்கு சமுகமளிக்காது வெளிநாடு சென்றுள்ள முப்படையினருக்கு பொதுமனிப்பு - பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்...
அடுத்த வருடத்திற்கான இலவச பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுச...