2 இலட்சம் சிமெந்து மூடைகள் இலங்கை வருகை – சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!
Thursday, January 27th, 2022
2 இலட்சம் சிமெந்து மூடைகளைத் தாங்கிய மற்றுமொரு கப்பல் நாளையதினம் நாட்டை வந்தடைய உள்ளதாக, சிமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
6 இலட்சம் சிமெந்து மூடைகளைத் தாங்கிய இரண்டு கப்பல்கள் கடந்த வாரம் நாட்டை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், சந்தையில் அதிகரித்துள்ள கேள்வி காரணமாக, சில பகுதிகளில் சிமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலை, துறைமுக நகர் மற்றும் நகர வீடமைப்புத் திட்ட நிர்மாணம் உள்ளிட்ட ஏனைய தனியார்த்துறை கட்டுமானப் பணிகளுக்காக அதிக கேள்வி உள்ளதாக சிமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலவச அம்புலன்ஸ் சேவையில் மேலும் 209 அம்புலன்ஸ் வண்டிகள்!
மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு ஒத்திவைப்பு!
நல்லொழுக்கமுள்ள சமூகத்தைக் கட்டியெழுப்பத் தேவையான பரிந்துரைகளை அகில இலங்கை சாசன பாதுகாப்புச் சபையால்...
|
|
|


