எதிர்வரும் திங்களன்று 75 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் – அமைச்சர் டக்ளசிடம் விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Friday, January 21st, 2022

விவசாயிகளிடம் இருந்து 75 ரூபாய்க்கு நெல் கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரம் எதிர்வரும் திங்கட்கிழமை கிடைத்தபின்னர் குறித்த தொகைக்கு நெல் கொள்வனவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட கமக்காரர் அமைப்புககளுடனான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சந்திப்பு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

இதன்போது, நெல் கொள்வனவிற்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக கமக்காரர் அமைப்புக்களினால் கேட்கப்பட்ட நிலையில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியில் கலந்துரையாடினார்.

இதன்போது, “எதிர்வரும் திங்கள்கிழமை குறித்த அமைச்சரவை தீர்மானம் கிடைக்க இருக்கிறது.

அதன் பின்னர் 75 ரூபாய் வீதம் விவசாயிகளிடம் இருந்து அரசாங்கம் நெல் கொள்வனவு செய்யும்” என்று அமைச்சர் மஹிந்தானந்தா கூறியதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கப்பாச்சி கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...
அவலத்தில் வாழும் மக்களின் துயரம் துடைக்கும் ஆண்டாக புதுவருடம் பிறக்கட்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் ட...

வடக்கின் மருத்துவ நிலையங்களில் தற்காலிகமாக பணியாற்றுவோருக்கு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் - டக்ளஸ் ...
டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினால் பாடசாலை இந்து சமய பாடநூல்களில் நிலவும் குறைபாடுகள் எடுத்துரைப...
21 ஆவது திருத்தச்சட்டத்துக்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி - டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட 5 அமைச்சர்களை ...