கிழக்கின் நீர்வேளாண்மை சார்ந்த அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் புதிய உத்தியோகத்தர்கள் நியமனம்!
Wednesday, January 12th, 2022
கிழக்கு மாகாணத்தில் நீர்வேளாண்மை சார்ந்த அபிவிருத்திச் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நக்டா எனப்படும் தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக நன்னீர் மீன் வளர்ப்பு, பருவகால மீன் வளர்ப்பு, பண்ணைகளில் இறால், நண்டு, கடலட்டை வளர்ப்பது போன்ற நீர்வேளாண்மையை விருத்தி செய்வதன் மூலம் பிரதேச மக்களுக்கான வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதுடன் நாட்டிற்கான அந்நியச் செலாவணியை அதிகரிப்பதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
அந்தவகையில் கிழக்கு மாகாணத்திலும் நீர்வேளாண்மை செயற்பாடுகளை அதிகரிக்கும் நோக்கில் கடற்றொழில் அமைச்சரினால் நக்டா நிறுவனத்திற்கு புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கல்வி அமைச்சரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது! ஏனைய விடயங்கள் குறித்தும் அவதானமெடுக்க வேண்டும்!
நீதிக்கு தலை வணங்குவேன் : அநீதிக்கு அடிபணியேன் - கடற்றொழிலாளர்க்கு தீங்கிழைக்கவும் மாட்டேன் - அமைச்ச...
வடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள் - அமைச்சர் டக்ளஸிடம் கையளிப்பு!
|
|
|


