உயர்தரமாக தரமுயர்ந்தது ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ.க மகளிர் பாடசாலை – பாடசாலை சமூகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவிப்பு!

Thursday, January 6th, 2022

ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ.க மகளிர் பாடசாலை தரம் 1-13 வரையான 1C பாடசாலையாக இன்று தரமுயர்த்தப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர்  மேரிசன் திரேஸ் மேரி கனிஸ்ரஸ் அவர்களின் தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவக வலயக் கல்விப் பணிப்பாளர், மாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார் ,  வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இளங்கோவன், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் மஞ்சுளாதேவி, பிரதேச சபையின் தவிசாளர் ஜெயகாந்தன் வேலனை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி ஈழ மக்கள் ஜனநயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

1872 இல் ஆரம்பித்த மேற்படி பாடசாலை, இவ்வாண்டு 150 ஆண்டினை பூர்த்தி செய்வதுடன் பாடசாலை சமூகத்தினரின் வேண்டுகோளுக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த பாடசாலையை தர்முயர்த்த முழு முயற்சியை மேற்கொண்டதாக தெரிவித்த பாடசாலை அதிபர், ஆதற்காக அமைச்சருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளையும் தெரிவித்தார்

Related posts:


மீன்பிடித் துறைமுகங்களில் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகின்றது 24 மணிநேர தகவல் பரிமாற்றச் சேவை - அமைச்ச...
தங்குதடையின்றி மீன்பிடித் தொழில் தொடர்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ஏற்றுமதியாளர்களுடனான சந்திப்ப...
ரணிலின் வெற்றி காலத்தின் தேவை - சந்தர்ப்பத்தை தவறவிட்டால் நிவர்த்தி செய்ய அடுத்த ஐந்து வருடங்கள் கா...