நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அவை இறக்குமதி செய்யப்படும் – மக்கள் அச்சமடைய தேவையில்லை என்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன உறுதி!
Monday, December 13th, 2021
அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் விநியோகிக்கும் பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்றும் ஒருபோதும் மக்களை பட்டினியில் வைக்கப்போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஊட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் – ஒரு கிலோ அரிசியின் விலையை 300 ஆக உயர்த்த திட்டங்கள் மேற்கொள்பட்டதாக கூறினார்.
இருப்பினும் அந்த திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டதாகவும் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, தற்போது 1 கிலோ நாட்டு அரிசி 99.50 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மொழி உரிமை அமுலாக்கதில் உள்ள பிரச்சினைகள் குறித்து 24 மணிநேரமும் முறைப்பாடு செய்யலாம்!
சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஐந்தாண்டு காலம் பணியாற்ற சீன மக்கள் கட்சியினால் ஏகமனதாக ஒப்பு...
இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 25,055 டெங்கு நோயாளர்கள், அடையாளம் - தேசிய டெங்கு கட்டுப்பாட...
|
|
|


