திருகோணமலை – கப்பல்துறை பகுதியில் பேருந்து விபத்து ; 26 பேர் காயம்!
Tuesday, December 7th, 2021
திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் கப்பல்துறைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளனர்.
தொழிற்சாலைப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதுண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
இதன்போது 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலை ஒன்றுக்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்: வெளியான தகவல்!
பால்நிலை மாற்றம் கொண்டவர்களின் சுதந்திரங்களை மதிக்கவேண்டும் - மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்து!
கரவெட்டியில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு உயிரிழப்பு !
|
|
|


