வலி. கிழக்குப் பிரதேசத்தில் வாழைக்குலைத் திருட்டு அதிகரிப்பு!
Thursday, August 18th, 2016
வலி. கிழக்குப் பிரதேசத்தில் அண்மைக் காலமாக இரவு வேளைகளில் வாழைக்குலைத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகப் பிரதேச மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர். தற்போது வாழைப் பழத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டி வருவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வலி. கிழக்குப் பிரதேசத்தின் கோப்பாய் இராச வீதி, நீர்வேலி மேற்கு மாலை வைரவர் கோவிலடி, சிறுப்பிட்டி, நவக்கிரி போன்ற பகுதிகளிலுள்ள வாழைத் தோட்டங்களிலேயே இந்த வாழைக் குலைத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக வாழைச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கோப்பாய்ப் பொலிஸார் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
பாடசாலை மாணவர்களின் தடுப்பூசி தொடர்பிலான அறிக்கை எதிர்வரும் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்படும் - சுகாதா...
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
ஏப்ரல் 21 தாக்குதல் - முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை!
|
|
|


